கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாதம்தோறும் மதிப்பூட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இரண்டு தினங்களுக்கு வழங்கப்படுகிறது.
மார்ச் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தினங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சியானது தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் நெல்லிக்காயை கொண்டு தயாரிக்கப்படும் பழரச பானம், தயார் நிலை பானம் பயிற்சி, நெல்லி ஜாம், தேன் நெல்லி தயாரிப்பு, நெல்லிக்காய் மிட்டாய் நெல்லி பொடி மற்றும் துருவல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஜிஎஸ்டி உடன் 1,770 ரூபாயை பயிற்சியின் முதல் நாள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவரை தொடர்பு கொள்ளலாம் எனவும் 9488518268 என்ற தொலைபேசி எண் அல்லது phtc@tnau.ac.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

