300 வகையான டீ; கோவை கல்லூரி மாணவர்கள் சாதனை முயற்சி!

கோவை: பல்வேறு வண்ணங்களில் 300 வகையான தேநீரை 30 நிமிடங்களில் தயாரித்து கோவை கல்லூரி மாணவர்கள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ராமகிருஷ்ணா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் கேட்டரிங் துறையைச் சேர்ந்த 40 மாணவர்கள் இணைந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

Advertisement

கொய்யா, லெமன், வெண்ணிலா, ஆரஞ்சு, லோட்டஸ், ஆப்பிள், மேங்கோ, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் உள்ளிட்ட 300 வகையான தேநீரை 30 நிமிடங்களில் செய்து அசத்தினர்.

பல வண்ணங்களில், பல சுவைகளில் தயாரிக்கப்பட்ட இந்த தேநீர் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் ஆச்சரியத்துடன் இவற்றைப் பார்த்துச் சென்றனர்.

Advertisement

Recent News

தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினரின் எச்சரிக்கை

கோவை: தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 30 அம்ச கோரிக்கைகளை...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group