கோவை அரசு கலைக்கல்லூரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை!

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் 2025-2026ம் கல்வியாண்டின் முதுநிலை படிப்புகளுக்கான (PG) மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் மொத்தம் 21 முதுநிலைப் படிப்புகள் 2 ஷிப்ட்டுகள் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

Advertisement

இதில் MCA படிப்பைத் தவிர்த்து, மற்ற அனைத்து படிப்புகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு (விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் பிள்ளைகள், என்.சி.சி., உள்ளிட்டவை) கலந்தாய்வு ஆகஸ்ட் 11 காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.மேலும், பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

முதல் ஆண்டுக்கு மொத்தம் 557 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள நிலையில், 6,514 மொத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மாணவர் சேர்க்கையானது மதிப்பெண்கள் மற்றும் சமூக ஒதுக்கீட்டின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என்றும் கல்லூரி முதல்வர் எழில் தெரிவித்துள்ளார்.

Advertisement

சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும், அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன், தங்கள் துறைகளில் காலை 9 மணிக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

Recent News

தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினரின் எச்சரிக்கை

கோவை: தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 30 அம்ச கோரிக்கைகளை...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group