கோவையில் சிறுத்தை நடமாட்டம்- நாயை கவ்வி செல்லும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: எட்டிமடை பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள ஜெகநாதன் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை அங்கு இருந்த வளர்ப்பு நாயை பிடித்து கவ்வி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எட்டிமடை அருகே மதுக்கரை வனப்பகுதி உள்ளதால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை தோட்டத்திற்கு வந்திருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Advertisement

உயிர் சேதம் ஏற்படும் முன்பே வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் உறுதி செய்து உள்ளனர்.

வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்கு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கட்டணமில்லா டயாலிசிஸ் சிகிச்சை- மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு…

கோவை: கோவையில் கட்டணமில்லா டயாலிசிஸ் சிகிச்சை பெற மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் சீத்தாலட்சுமி அரசு நகர்புற ஆரம்ப சுகாதாநிலைய வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் சிறுநீரக செயலிழப்பு...

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...