கோவை டாக்ஸி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய உதகை ஓட்டுநர்கள்- ஆட்சியரிடம் மனு…

கோவை: கோவை டாக்ஸி ஓட்டுநரை உதகை டாக்ஸி ஓட்டுநர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை டாக்ஸி ஓட்டுநர் உதகை டாக்ஸி ஓட்டுநர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்தியும் சக டாக்சி ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். கால் டாக்ஸி ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து உதகைக்கு வாடகைக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது உதகையில் இருந்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து உதகைக்கு வாடகைக்கு வரக்கூடாது என்றும் உதகையிலிருந்தும் வாடகை ஏற்றக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்பொழுது உதகை கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்கவேலை தாக்கியுள்ளனர். அதனால் தங்கவேல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்தியும் கோவையை சேர்ந்த சக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை…

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. நேற்று அதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மாநிலம்...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.