கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

கோவை: கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு போலீஸ் நிலைய பகுதியில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி 20 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஆனந்தகுமார் (27), நரேஷ்குமார் (35) மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜான்(31) ஆகியோர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆனந்தகுமார், நரேஷ் குமார் மற்றும் ஜான் ஆகியோர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கலெக்டர் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement

அந்த உத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளான ஆனந்தகுமார், நரேஷ் குமார், ஜான் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பு தூய்மை…

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள் சிறப்பு தூய்மை செய்யப்பட்டன. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின் படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய...

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.