இடையர்பாளையத்தில் வீட்டில் விபசாரம்; பெண்கள் 4 பேர் கைது!

கோவை: கோவையில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் இடையர்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய பெண் ஒருவர் வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார்.

பின்னர் இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபசாரத்திற்கு அழைத்த அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் தடாகம் பகுதியை சேர்ந்த 57 வயது பெண் என்பதும், அவர் இடையர்பாளையம், பழனியம்மாள் லே அவுட் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 27, 30, 40 வயது பெண்கள் 5 பேரை பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பெண்களையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விருந்தீஸ்வரர் கோவில் திருவீதி உலா அன்னதானம்…

கோவை: வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் பிரதோசம் விழா சுவாமி திருவீதி உலா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...