இடையர்பாளையத்தில் வீட்டில் விபசாரம்; பெண்கள் 4 பேர் கைது!

கோவை: கோவையில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவையை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் இடையர்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய பெண் ஒருவர் வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார்.

Advertisement

பின்னர் இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபசாரத்திற்கு அழைத்த அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் தடாகம் பகுதியை சேர்ந்த 57 வயது பெண் என்பதும், அவர் இடையர்பாளையம், பழனியம்மாள் லே அவுட் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 27, 30, 40 வயது பெண்கள் 5 பேரை பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பெண்களையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விமான நிலையத்தில் இ சிகரெட், தங்கம் கைப்பற்றல்…

கோவை: ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணியிடம் தங்கம் மற்றும் மின்னணு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...