இடையர்பாளையத்தில் வீட்டில் விபசாரம்; பெண்கள் 4 பேர் கைது!

கோவை: கோவையில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் இடையர்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய பெண் ஒருவர் வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார்.

பின்னர் இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபசாரத்திற்கு அழைத்த அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் தடாகம் பகுதியை சேர்ந்த 57 வயது பெண் என்பதும், அவர் இடையர்பாளையம், பழனியம்மாள் லே அவுட் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 27, 30, 40 வயது பெண்கள் 5 பேரை பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பெண்களையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.