போத்தனூரில் போதை மருந்து, ஊசிகளுடன் சுற்றிய 3 வாலிபர்கள்!

கோவை: போத்தனூரில் போதை மருந்து போதை ஊசிகளுடன் சுற்றிய மூன்று வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 200 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement

போத்தனூர் காவல் ஆய்வாளர் அசோக் குமார், மற்றும் உதவி ஆய்வாளர் திருவாசகம் மற்றும் போலீசார் போத்தனூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வெள்ளலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நின்று கொண்டு இருந்தனர்.

அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

Advertisement

அவர்களை சோதனை செய்தபோது 5 கிலோ கஞ்சா, 200 தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், 30 போதை ஊசிகள், ஆகியவை இருந்தது தெரியவந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 3 செல்போன்கள் மற்றும் பைக் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

போலீஸ் விசாரணையில் அவர்கள் மைல்கல் பாரதிநகரை சேர்ந்த ஷாருக்கான்(28), ஸ்ரீராம் நகரை சேர்ந்த யாசர் மூஸாபாத் ( 30), மற்றும் குனியமுத்தூர் காந்திநகரை சேர்ந்த லத்தீப் (29) என்ன தெரிய வந்தது.

அதன் பிறகு போலீசார் 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு…

கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...