கோவையில் பதிவாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்…

கோவை: ஓய்வூதிய சங்கத்தை பதிவு செய்த தரவில்லை என்று கூறி அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் பதிவாளர் அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கோவையை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் “அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம்- கோவை மாவட்டம்” என்ற பெயரில் சங்கம் துவங்குவதற்கு ஆன்லைன் மூலம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கோவை வடக்கு பதிவாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் தற்பொழுது வரை பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளாமலும் சங்கத்தை பதிவு செய்யாமலும் இருப்பதாகவும் இது குறித்து கேட்டால் ஏதேதோ காரணங்களை கூறி தேவையில்லாத ஆவணங்களை எல்லாம் கேட்பதாக பதிவாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து உடனடியாக தங்கள் சங்கத்தை பதிவு செய்து தர வேண்டும் எனவும் காலம் தாழ்த்துவதை கண்டிப்பதாகவும் முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

இதுகுறித்து பேசிய கோவை மாவட்ட பொதுச் செயலாளர் அருணகிரிநாதன், ஓய்வூதியர்களின் நலனுக்காக சங்கம் அமைப்பதற்கு அனைவரது கையொப்பத்துடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்ததாகவும், பதிவு செய்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் ஏதேதோ காரணத்தை கூறி அதனை திருப்பி அனுப்புவதாக தெரிவித்தார்.

மேலும் சம்பந்தமே இல்லாமல் போக்குவரத்து கழகத்திடமிருந்து NOC வேண்டுமென்று கேட்பதாகவும் இதற்கு முன்பு 27 சங்கங்கள் தமிழ்நாட்டில் நாங்கள் பதிவு செய்துள்ள நிலையில் அப்பொழுதெல்லாம் இது போன்ற நடைமுறை இல்லை ஆனால் தற்பொழுது வேண்டுமென்றே தங்களை அலைக்கழிப்பதாக தெரிவித்தார்.

Advertisement

இதற்கு முன்பு பதிவு செய்யும்பொழுது ஏழு பேர் மட்டுமே ஆதாரங்களை கொடுத்து சங்கத்தை பதிவு செய்த நிலையில் தற்பொழுது அனைவரது ஆதாரங்களையும் விவரங்களையும் பதிவாளர் கேட்பதாகவும் ஒரு சங்கத்தை பதிவு செய்வதற்கு ஏழு பேர் இருந்தால் போதும் என்று சட்டம் இருக்கக் கூடிய சூழலில் வேண்டுமென்றே இங்கு இழுத்தடிப்பதாக தெரிவித்தார்.

அண்மையில் நெல்லை மாவட்டத்தில் கூட பதிவு செய்ததாகவும் அங்கு கூட இது போன்ற நடைமுறை இல்லை ஆனால் இங்கு மட்டும் புதிதாக ஏதேதோ நடைமுறைகளை இவர்கள் கூறுவதாக தெரிவித்தார்.

காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியும் தங்கள் சங்கத்தை பதிவு செய்து கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வோம் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு…

கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...