மருதமலை மலைக்கோயிலுக்கு வாகனங்களுக்கு அனுமதியில்லை!

கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை மலைக்கோயிலுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

கோவையின் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுவது போலவே, மருதமலையிலும் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படும்.

அந்த வகையில், தைப்பூசத் திருவிழா 1ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான வைபவங்கள் மருதமலையில் இன்று முதலே தொடங்குகின்றன. இன்று மாலை 5 மணிக்கு மருதமலையில் விநாயகர் பூஜை வாஸ்து சாந்தி நடைபெற உள்ளது.

மருதமலையில் நாளை காலை 6:30க்கு மேல், 7 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் 31ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது.

Advertisement

பிப்ரவரி 1ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் திருத்தேர் இழுக்கப்பட்டு முருகன் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது. மறுநாள் மாலை 4:30 மணியில் இருந்து 7:30 மணி வரை தெப்பத் திருவிழாவும், பிப்., 3ம் தேதி மாலை 4:30 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்வும் நடைபெறுகிறது.

4ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக கோவை மட்டுமல்லாது அண்டை மாவட்ட மக்களும், கேரள மாநில மக்களும் திரளாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

பக்தர்கள் நெரிசலைக் கருத்தில் கொண்டு ஜன., 30ம் தேதி முதல் பிப்., 2ம் தேதி வரை மலைக் கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நாட்களில் கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகள் மற்றும் படிக்கட்டு வழியாக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...