கோவையில் மதராஸ் மாணவர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தினம் கொண்டாட்டம்…

கோவை: மதராஸ் வேளாண் மாணவர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் மதராஸ் வேளாண் மாணவர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

நாட்டின் 77 வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் முனைவர் சுப்ரமணியன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி குடியரசு தின விழா உரையை நிகழ்த்தினார். மேலும் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.

Advertisement

77 வது குடியரசு தினத்தின் கருப்பொருளான “வந்தே மாதரம் 150 ஆண்டுகள்” “ஆத்மநிர்பர் பாரத்” என்ற நோக்கத்தை வலியுறுத்தினார். மேலும் சீர்திருத்தம் செயல் படுத்துதல் மாற்றம் என்ற கொள்கைகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு இந்தியரும் வலிமைமிக்க புதுமையான இந்தியாவை உருவாக்க பங்களிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் மதராஸ் வேளாண் மாணவர் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் செந்தில் மற்றும் செயலாளர் பூமிராஜ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பல்கலைக்கழக பொறுப்புத் துணைவேந்தரை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பொறுப்புத் துணைவேந்தர் சுப்ரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் 2023-2026 காலகட்டத்தில் பணியாற்றிய மதராஸ் வேளாண் மாணவர் கூட்டமைப்பு நிர்வாக குழு உறுப்பினர்களின் சேவையை நினைவு கூர்ந்தும் மதராஸ் வேளாண் இதழ் வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கிய முக்கிய பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கைவினை கலைஞர்களுக்கு மானியம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

கோவை: கைவினை கலைஞர் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும் மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் கைவினை...

Latest News Coimbatore

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.