கோவையில் விடுதி உணவு மற்றும் குடிநீரால் பாதிக்கப்பட்ட மாணவிகள்- விடுமுறை அறிவித்த கல்லூரி…

கோவை: உணவு மற்றும் குடிநீரால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் முறையிட்டதை தொடர்ந்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து கங்கா நர்சிங் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை வட்டமலைபாளையம் பகுதியில் கங்கா நர்சிங் கல்லூரி (தனியார்) இயங்கி வருகிறது.

நேற்று முன் தினம் இரவு கல்லூரி விடுதியில் உணவு அருந்திய பிறகு பல்வேறு மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அந்நேரத்தில் உணவு அருந்திய 100க்கும் மேற்பட்ட மாணவிகள் உடனடியாக அதே கல்லூரி குழுமத்தின் சாய்பாபா காலனி பகுதியில் இயங்கி வரும் கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலை அனைவரும் திரும்பினர்.

மூன்று மாணவிகளுக்கு மட்டும்தான் உடல் பாதைகள் ஏற்பட்டதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதர மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உணவு மற்றும் குடிநீரில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குடிநீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் இன்று பல்வேறு மாணவிகளின் பெற்றோர் கல்லூரிக்கு சென்று இது குறித்த முறையிட்ட நிலையில் சுகாதாரத்துறையினரும் கல்லூரி வளாகத்திலும் விடுதியிலும் உணவகத்திலும் குடிநீர் தொட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காவல்துறையினரும் கல்லூரிக்கு சென்றனர்.

இந்நிலையில் தற்போது கல்லூரி நிர்வாகம் 10 நாட்கள் Study Holidays என்ற முறையில் விடுப்பு அறிவித்து திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

இவங்களுக்கு வயசாகிடுச்சுனு சொன்னா நம்புவாங்களா?- 85 வயதிலும் குண்டு எரிந்து லாங் ஜம்ப் செய்த தாத்தா பாட்டிகள்…

கோவை: கோவையில் நடைபெறும் மூத்தோர் தடகளப் போட்டியில் முதியோர் அசத்தினர். கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோவை மாவட்ட மூத்தோர் தடகள போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வேகமான...

Video

கோவையில் ஈச்சர் லாரியில் நெழிந்த பாம்பு…

கோவை: எல் அண்ட் டி பைபாஸில் திரில் ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்...