பேரூர் கோவில் தேரோட்டம்; மக்கள் உற்சாகம் – வீடியோ!

கோவை: பேரூர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள் “பேரூரா பட்டீசா” என்று கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் இழுத்தனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற கோவிலான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் துவங்கியது.

Advertisement

நேற்று இரவு பட்டீசுவரர் திருக்கல்யாண உற்சவம் முடிந்த நிலையில், இன்று அலங்கரிக்கப்பட்ட நிலையில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் தனித் தனியே தேரில் எழுந்தருளினர்.

தொடர்ந்து பேரூர் ஆதீனம் மருவாசல அடிகளார் தேறினை வடம் பிடித்துக் கொடுக்க, பக்தர்கள் “பேரூரா, பட்டீசா” என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தோரோட்டம் சிறுவாணி சாலை மற்றும் கோவிலின் மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர்நிலைத் திடலை அடைந்தது.

Advertisement

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...