கோவையில் பெய்து வரும் தொடர் மழை- ஆட்சியர் அலுவலகத்தில் சாய்ந்த மரம்…

கோவை: மழையின் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த பூ மரம் வேரோடு சாய்ந்தது…

Advertisement

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக வலுவில்லாமல் இருக்கின்ற மரங்களை வெட்டி அகற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஜெனரேட்டர் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்த பெரிய பூ மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மழையின் காரணமாக நன்கு ஊறி இருந்த அந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

Recent News

கோவையில் நடைபெற்ற SIR ஆலோசனை கூட்டம்- ஆட்சேபனை தெரிவித்த கட்சிகள்…

கோவை: SIR ஆலோசனை கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்தான...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp