கோவையில் கடையில் திருடிய பெண் ஊழியர் கைது

கோவையில் கடையில் திருடிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்…

கோவை ஆர்.எஸ்.புரம் பெரியசாமி ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக்(45). இவர் பெரியகடைவீதி பகுதியில் வெள்ளி விற்பனையகம் நடத்தி வருகிறார். இங்கு சிவானந்தா காலனி கண்ணப்பபுரத்தை சேர்ந்த மலர்விழி(46) என்ற பெண் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று வேலைக்கு வந்த மலர்விழி 164 கிராம் வெள்ளி தட்டை திருடி அதனை மறைத்து கொண்டு செல்ல முயன்றார். இதனை பார்த்த கடை காவலாளி மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து மலர்விழியை கையும், களவுமாக பிடித்து உரிமையாளர் கார்த்திக்கிடம் தெரிவித்தனர்.

இது குறித்து கார்த்திக் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய ஊழியர் மலர்விழியை கைது செய்தனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கைதி தப்பியதில் பாதுகாப்பு அலட்சியம்; 2 போலீசார் மீது நடவடிக்கை

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பிய சம்பவத்தில், உதவியதாக கூறப்படும் கார் டிரைவர் கைது செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டிய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.