மாஸ் ப்ளான்; உக்கடம் பேருந்து நிலையத்திற்கு ஒப்புதல்… டெண்டர் கோரியது மாநகராட்சி!

கோவை: உக்கடம் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அதற்கான டெண்டர் கோரியது மாநகராட்சி.

கோவையில் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்று உக்கடம் பேருந்து நிலையம். இப்பகுதியில் புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின், பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கோவையில் அறிவித்தார்.

தற்போது அமைந்துள்ள பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதோடு, எதிரோ உள்ள காலி இடத்தில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பதுவும் திட்டம்.

Advertisement

தற்போது அமைய உள்ள பேருந்து நிலையத்தில் பஸ்-பே, 32 கார்கள் மற்றும் 100 பைக்குகளை நிறுத்த வசதியான பார்க்கிங், இரு பேருந்து நிலையங்களையும் இணைக்க நடைபாதை, கடைகள், புட் கோர்ட் ஆகியவையும் உக்கடம் பேருந்து நிலையத்தில் அமைய உள்ளன.

உக்கடம் பேருந்து நிலையத்தை அமைக்க தமிழக அரசு ரூ.23 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், கட்டுமானத்திற்கான டெண்டர் கோரியுள்ளது கோவை மாநகராட்சி.

ஜூலை 8ம் தேதி டெண்டர் சமர்ப்பிக்க கடைசி நாள் என்றும் கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

புதிய பேருந்து நிலையம் அமைக்கும் போது மெட்ரோ நிலையத்திற்கான வசதிகளை முன்கூட்டியே ஏற்படுத்துவதையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை விருந்தீஸ்வரர் கோவில் திருவீதி உலா அன்னதானம்…

கோவை: வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் பிரதோசம் விழா சுவாமி திருவீதி உலா அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில்...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...