கோவை: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த கலைஞர் மதுபாட்டில், சிகரெட்டில் பட்டாசு போன்று வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்…
போதை ஒழிப்பு தினம் ஜூன் 26ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகின்றன.
Advertisement


இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யூ எம் டி ராஜா என்ற கலைஞர் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிகரெட் மற்றும் மது பாட்டில்களில் பட்டாசு திரியை கொண்டு பட்டாசு வெடி போல் வடிவமைத்துள்ளார்.
“சிகரெட் புகைப்பதும் மது அருந்துவதும் நம்மையே அழித்து விடும்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இதனை வடிவமைத்துள்ளார்.
International Day Against Drug Abuse and Illicit Trafficking
வீடியோ காட்சிகள்
International Day Against Drug Abuse and Illicit Trafficking pic.twitter.com/9hWZicBNOf
— NC Trends (@TrendsNc31962) June 26, 2025