போதைப் பொருள் ஒழிப்பு: கோவை போலீஸ் எஸ்.ஐ.,க்கு முதலமைச்சர் விருது!

கோவை: போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட கோவை போலீஸ் உதவி ஆய்வாளருக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாலன் (33). இவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் கோவை மாநகர போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு சிறப்புப் படையிலிருந்து வருகிறார்.

தனபாலன் இதுவரை 55 போதைப் பொருள் வழக்குகளில்169 பேரைக் கைது செய்துள்ளார். அவர்களிடமிருந்து161 கிலோ கஞ்சா மற்றும்77 கிராம் மெத்தபெட்டமையின் எனப்படும் போதைப் பொருள் ஆகியவற்றைக் கைப்பற்றி உள்ளார்.

Advertisement

குற்றவாளிகளிடம் இருந்து 29 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 கார்களையும் பறிமுதல் செய்துள்ளார். இவரின் அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பில் கோவை மாநகரில் சிறப்பாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து தனபாலனுக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவ்விருதினை அவர் இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் பெற உள்ளார்.

தமிழ்நாட்டில் 15 போலீஸ் அதிகாரிகளில் கோவை மாநகரில் விருது பெரும் ஒரே ஒரு எஸ்.ஐ தனபாலன் ஆவார். அவரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த தர்மர்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது 5 பேர் மறுவாழ்வு பெற்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, செங்குட்டை நாராணாபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மர் (46) என்பவர்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...