Header Top Ad
Header Top Ad

கோவை, திருப்பூர், ஈரோடு வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்!

கோவை: கோவை: கோவை சந்திப்பிலிருந்து தன்பாத் நோக்கி இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-

கோவையிலிருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக தன்பாத் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 03680), இயல்பாக 22ம் தேதி காலை 7.50 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.

Advertisement
Lazy Placeholder

எனினும், பூர்வ ரயிலான தன்பாத்–கோவை சந்திப்பு ரயிலின் தாமதம் காரணமாக, இந்த சிறப்பு ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, ஜூலை 22ம் தேதி மாலை 4.15 மணிக்கு (8.25 மணி நேரம் தாமதம்) இந்த ரயில் கோவையிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

Advertisement
Lazy Placeholder

பயணத்திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாற்றப்பட்ட நேரம் தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு ரயில்வே ஹெல்ப்லைன் எண்கள் அல்லது அதிகாரப்பூர்வ தளத்தை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles