கோவை பிரியாணி கடை குருமாவில் பல்லி இருந்த விவகாரம்- நாடகமாடிய இருவர் கைது

கோவை: கோவை பிரியாணி கடையில் சிக்கன் குருமாவில் பல்லி இருந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை ஆர்.எஸ் புரம் அருகே வி.சி.வி லேஅவுட் பகுதியில் கோவை பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த மே 27 ம் தேதி சிலர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, அவர்களில் ஒருவர் பிரியாணிக்கு ஊற்றிய சிக்கன் குருமாவில் பல்லி இறந்து கிடப்பதாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து ஒரு நாள் கழித்து பல்லி கிடந்ததாக நடந்த சம்பவம் ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்ற தகவல் ஹோட்டல் உரிமையாளருக்கு கிடைத்ததாக, ஹோட்டல் உரிமையாளர் உமாபதி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இச்சம்பவம் தொடர்பாக
ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.. தொடர்ந்து சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நடைபெறப்போகும் சம்பவத்தை முன் கூட்டியே பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்த நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அண்ணாதுரை, சரவணன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் , நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

11%ஐ 4-ஆக குறைத்தவர் நயினார்; கோவையில் செங்கோட்டையன் விமர்சனம்!

கோவை: 11%ஐ 4-ஆக குறைத்தவர் நயினார் நாகேந்திரன் என கோவையில் செங்கோட்டையின் விமர்சித்துள்ளார். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அறிவாலயத்தில்...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.