கோவையில் ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை: ஊர்ப்புற நூலகங்களை தரம் உயர்த்திட வலியுறுத்தியும் காலமுறை ஊதியம் தர வலியுறுத்தியும் ஊர்ப்புற நூலகர்கள் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் கோயம்புத்தூர் மண்டலத்தை சேர்ந்த ஊர்ப்புற நூலகர்கள் ஊர்ப்புற நூலகங்களை தரம் உயர்த்திட வலியுறுத்தியும் காலமுறை ஊதியம் தர வலியுறுத்தியும் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் ஊர்ப்புற நூலகர்கள், 1915 ஊர்ப்புற நூலகங்களை தரம் உயர்த்திட வலியுறுத்தியும் தேர்தல் வாக்குறுதியின் படி காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தியும் கோவை, மதுரை, விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி கோவையில் சிவானந்த காலனி பவர் ஹவுஸ் பகுதியில் கோவை மண்டலத்தை சேர்ந்த ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோவை நீலகிரி ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி திருப்பூர் கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஊர்புற நூலகங்களை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் தரம் உயர்த்த வேண்டும் என்றும் இந்த ஆட்சி முடிவதற்குள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.