கோவை விமான நிலையத்தில் கஞ்சா மற்றும் ட்ரோன்கள் பறிமுதல்

கோவை: கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு உள்ள ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா பறிமுதல் செய்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க மற்றும் வான் புலனாய்வுப் பிரிவு, சுங்கத் துணை ஆணையர் தலைமையில், சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

அப்பொழுது சிங்கப்பூரில் இருந்து SCOOT விமானம் மூலம் 2 பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 7 கோடி மதிப்பு உள்ள ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவை (6.713 கிலோ) பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஃபஹத் மோன் முஜீப் மற்றும் சுஹைல் உபைதுல்லா என்பதும் தெரியவந்தது.

Advertisement

அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...