கோவையில் ஆட்சியர் அலுவலகம் பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சித்ரா பகுதியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் உப்பிலிபாளையத்தில் இருக்கும் பழைய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வரவில்லை மேலும் எதிர்ச்சியாக இ-மெயிலை சோதனை செய்த போது ஊழியர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன் அடுத்து பீளமேடு காவல் நிலையம் மற்றும் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் உப்பிலிபாளையத்தில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அதிநவீன கருவியுடன் இரண்டு அலுவலகத்திலும் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

சோதனை பின்பு இது புரளி என்று தெரியவந்துள்ளது அதனைத் தொடர்ந்து இமெயில் யார் அனுப்பியது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட நிலையில் அங்கும் சோதனை நடத்தப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் மிரட்டல் வந்துள்ளதால் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.