கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெளிநாட்டில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 10 நாட்களில் இன்று நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அலங்கார செடிகள் உள்ள இடம் காம்பவுண்ட் சுவர் என அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

கடந்த 3 முறை இந்தியாவில் உள்ள பகுதியில் இருந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது வெளி நாட்டில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில் சைபர் கிரைம் போலிசார் யார் இந்த மிரட்டலை விடுகின்றனர் என தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தேர்தல் பரிசு கோவையில் புகார் எண்கள் அறிவிப்பு…!

கோவையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதிமீறல்கள் மற்றும் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகார்களை பெற போலீசார் கட்டுப்பாட்டு அறை தொடங்கியுள்ளனர்.

Video