ஜெயிலர் 2 சூட்டிங் முடிந்து சென்னை திரும்பினர் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன்

கோவை: ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

கேரளாவில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை புறப்பட்டனர்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படம் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் கோவை அடுத்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 17ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் கோவை வந்தடைந்து பாலக்காடு சென்றனர்.

குறிப்பிட்ட காட்சிகளை படக்குழுவினர் கேரளாவில் எடுத்ததை அடுத்து இன்று இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினர். அதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த நடிகர் ரஜினியை அங்கிருந்து ரசிகர்கள் தலைவா தலைவா என்று கூறி வரவேற்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து சட்டமன்ற...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...