கோவையில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கோவை: மருதமலை அருகே காட்டுயானை தாக்கி சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்தார்.

கோவை மருதமலை அருகே தொழிலாளி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கோவை மருதமலை பகுதியில் செந்தில் (55) என்பவர் தன்னுடைய வேலை செய்யும் தாடிக்காரர் தோட்டத்திற்கு நேற்று மாலை செல்லும் போது, திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் செந்தில் என்பவருக்கு வயிற்றுப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது .

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதலில் ரோலக்ஸ் யானை சம்பந்தப்பட்டதா ? அல்லது வேறு யானையா ? என்பது குறித்து வனத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செந்தில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து சட்டமன்ற...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...