உப்பிலிபாளையத்தில் சிக்னலால் சிக்கலுக்கு தீர்வு!

கோவை: உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் சிக்னல் அமைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோவை அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் கடந்த வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

ஆனால் அதனைத் தொடர்ந்து உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழைய அவினாசி மேம்பாலம், நஞ்சப்பா ரோடு, ஆடிஸ் வீதி, ஜவான் ரவுண்டானா போன்ற சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சந்தித்து நெரிசலை உருவாக்கின.

இதனால் பொதுமக்கள் சிக்னல் அமைக்க கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து உடனடியாக சிக்னல் அமைத்தனர். நேற்று முதல் இது செயல்பாட்டுக்கு வந்தது.

இதனால் போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

போக்குவரத்து போலீசார் கூறுகையில், “தீபாவளி பண்டிகை முடிந்து போக்குவரத்து நிலை சீராக இருந்தால், இந்த சிக்னல் நிரந்தரமாக வைக்கலாமா அல்லது நெரிசல் நேரங்களில் மட்டுமா செயல்படுத்தலாமா என்பதில் முடிவு எடுக்கப்படும்,” என தெரிவித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.