கோவையில் பல நாள் போராட்டத்திற்கு பிறகு பிடிபட்ட ரோலக்ஸ்

கோவை: கோவையில் நீண்ட நாட்கள் போக்கு காட்டி வந்த ரோலக்ஸ் யானை பிடிப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி அமைந்து உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, குடிநீர் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவது தொடர் கதையாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் உள்ள தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ‘ரோலக்ஸ்’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது.

அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து, அந்த ‘ரோலக்ஸ்’ காட்டு யானையை இடமாற்றம் செய்வது தொடர்பாக கோவை மாவட்ட வனத் துறையினர் உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர்.

Advertisement

உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததை தொடந்து, அந்த யானையை பிடிப்பதற்கான பணிகளில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ரோலக்ஸ் யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப் பகுதியில் இருந்து வெளியேறியதை அடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் ஓய்வு பெற்ற வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும், யானை அங்கு இருந்து தப்பி வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக நாள்தோறும் இரவு, பகலாக யானையை கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து யானைக்கு மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்த முயன்றார். அப்போது திடீரென அந்த யானை மருத்துவர் விஜயராகவனை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதை அடுத்து ரோலக்ஸ் கண்காணித்து பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட கபில்தேவ், நரசிம்மன் மற்றும் முத்து ஆகிய மூன்று யானைகள் கண்காணித்து வந்தன. அதில் நரசிம்மன், முத்து ஆகிய இரண்டு யானைகளுக்கு மதம் பிடித்ததால் கடந்த 10 ம் தேதி டாப்சிலிப்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதற்கு பதிலாக அங்கிருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானையை கம்பன் ஊருக்கு கொண்டு வரப்பட்டு ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை வனத்துறை கால்நடை மருத்துவர்கள் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர். கும்கி யானைகளின் உதவியுடன் அதனை வாகனத்தில் ஏற்றியுள்ள வனத்துறையினர் காட்டு பகுதிக்குள் விட்டு கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

பல நாட்களாக போக்கு காட்டி வந்த ரோலக்ஸ் காட்டு யானை தற்பொழுது பிடிபட்டுள்ளது அப்பகுதி விவசாயிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group