கோவையில் வாகன சோதனையில் போலீஸ்காரர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்!

கோவை: கோவையில் வாகன தணிக்கையின் போது போலீஸ்காரர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் வசிப்பவர் பிரவீன் (வயது 26). ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில், போக்குவரத்து பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

நேற்று உதவி ஆய்வாளர் பிரசாந்த் தலைமையிலான போலீசாருடன் இணைந்து தொண்டாமுத்தூர்- வடவள்ளி சாலையில் பிரவீன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த காரை பிரவீன் தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால், காரை ஓட்டி வந்த நபர் நிறுத்தாமல் பிரவீன் மீது மோதிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றார்.

இந்த விபத்தில் பிரவீனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரை சக போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து பிரவீன் வடவள்ளி போலீசில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிந்து விசாரித்து, காரை ஓட்டிச்சென்ற நபரைத் தேடி வருகின்றனர்.

Advertisement

Recent News

கோவை மக்களே எனக்கு பாதுகாப்பு- துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்…

கோவை: கோவைக்கு வருகை புரிந்துள்ள துணை குடியரசுத் தலைவர் கோவை மக்களே எனக்கு பாதுகாப்பு என தெரிவித்துள்ளார்.கோவைக்கு வந்துள்ள துணை குடியரசுத் தலைவர் காலையில் கொடிசியாவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிறகு டவுன்ஹால் பகுதியில்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...