மருதமலை அருகே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் யானை உயிரிழப்பு…

கோவை: மருதமலை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை உயிரிழந்தது…

கோவை மருதமலை அருகே பெண் காட்டுயானை ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் கிடந்தது கண்டறியப்பட்டது. அதனுடன் ஒரு குட்டியானையும் இருந்தது. பின்னர் வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் அந்த குட்டியானையை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்து விட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் காட்டுயானைக்கு நான்கு நாட்களாக கும்கியானையின் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்தனர். குளுக்கோஸ், பழச்சாறு ஆகியவற்றுடன் சத்து மாத்திரைகளை கொடுத்தும் ஊசி மூலம் மருந்துகளை செலுத்தியும் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று Hydro Therapy என்ற நீரில் இறக்கி சிகிச்சை அளிக்கும் முறையை கையாண்டனர். நீரில் அந்த பெண் யானையை இறக்கி நீரை ஊற்றி சிகிச்சை அளித்த நிலையில் மீண்டும் யானையை நீரில் இருந்து வெளியே எடுக்கும் போது உயிரிழந்தது.

நாளை பிரேத பரிசோதனை நடைபெறும் என்றும் பிரேத பரிசோதனையில் யானை உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.