அன்னபூர்ணா ஹோட்டலில் இன்று முதல் மெனு குறைப்பு…

கோவை: கேஸ் சிலிண்டர் தட்டுபாடு காரணமாக உணவு மெனு குறைக்கப்படுவதாக அன்னபூர்ணா நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவி வரும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு காரணமாக கோவையில் அன்னபூர்ணா உணவகம் இன்று (10.03.2026) முதல் உணவு மெனு பட்டியலை குறைப்பதாக தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த பிரபல சைவ உணவகமாக திகழ்ந்து வரும் அன்னபூர்னா ஹோட்டல் நிர்வாகம், பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது.

இந்நிலையில் உணவு மெனு குறைக்கபடுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் புவிசார் அரசியல் நெருக்கடி காரணமாக LPG ஏரிவாயு கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது எனவும் அதனால் LPF எரிபொருள் கிடைப்பதில் தினசரி குறைபாடுகளை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக சேவைகளை முழுமையாக நிறுத்தாமல் தற்காலிக நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதாகவும், அதன்படி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மட்டும் ஹோட்டலில் இருக்கும் என்றும் உணவு மெனு பட்டியல் குறைக்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு முழுமையான விநியோகத்தை மீட்டெடுக்க அரசு மற்றும் விநியோகத்தர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றோம் என்றும்
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதகாவும் தெரிவித்துள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வடவள்ளி துணை சுகாதார நிலையம் சர்ச்சை: செவிலியர் மீது நடவடிக்கை

கோவை வடவள்ளி துணை சுகாதார நிலைய கட்டிடத்தை கூடுதலாக குடியிருப்பாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் செவிலியர் கனிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Video

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அட்டகாசம்: இன்ப்ளுயன்சர்களிடம் விசாரணை!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஜித்து சாஜி மற்றும் நண்பர்கள் பொது இடத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை போலீசார் விசாரணை செய்தனர்.