40 வயதை கடந்துவிட்டீர்களா? கண் அழுத்தம் ஏற்படலாம்… குளுக்கோமா வாரத்தில் கோவை மருத்துவர்கள் அறிவுரை!

கோவை: 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கண் நீர் அழுத்த நோய் பாதிப்பு ஏற்படலாம் என்றும், அதற்கு உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை அவசியம் என்றும் கோவை தி ஐபவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உலக அளவில் கண் நீர் அழுத்த நோய் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 8 முதல் 14 வரை குளுக்கோமா வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனிடையே, கோவையில் செயல்பட்டு வரும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில், கண் நீர் அழுத்த நோய் (குளுக்கோமா) பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதாகவும், அறுவை சிகிச்சைக்கான கட்டணத்தில் தள்ளுபடி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குளுக்கோமா நோய் குறித்து அம்மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சித்ரா ராமமூர்த்தி, மருத்துவர்கள் முரளிதர், ஐமன், நிரஞ்சனா ஆகியோர் கூறியதாவது:-

Advertisement

குளுக்கோமா பாதிப்பைக் கண்டறிய வழக்கமான கண் மற்றும் நரம்பு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் ஒட்டுமொத்தமாக 5% பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோரில் மட்டும் 8% பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் பாதிக்கப்பட்டவர் பார்வையிழக்கும் அபாயம் உள்ளது. முதலில் பக்கவாட்டுப் பகுதிகளில் பார்வை மங்கலாகிக்கொண்டே வரும். பிறகு மெல்லமெல்ல முழு பார்வையும் பறிபோகும்.

Advertisement

எனவே நோய் பாதிப்பு ஏற்பட்ட உடனே சிகிச்சையைத் தொடங்க வேண்டும். குளுக்கோமா நோயால் போன பார்வையை மீட்க முடியாது. ஆனால், அந்த நோய் பரவலைத் தடுக்க முடியும்.

பார்வை மங்குதல், கண்களில் நீர் வடிதல், கண் கூச்சம் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும். 15 ஆயிரம் பேரில் 1 குழந்தைக்கு இந்த நோய் ஏற்படுகிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணமும் குறைவு தான். ஆனால், தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவை.

இது மற்றவருக்கு பரவும் தன்மை உள்ள நோய் கிடையாது என்றாலும், மரபணு ரீதியாக மற்றவருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...