ஏடிஎம் மோசடி: புகார் அளிக்க கோவை மாநகர போலீசார் அழைப்பு!

கோவை: ஏடிஎம் அமைத்துத் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கோவை மாநகர் குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவை மாநகரில் ஏடிஎம் அமைத்து தருவதாக 50க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாயை ஈரோடு பள்ளிபாளையத்தை சேர்ந்த தம்பதி துரைசாமி (46) மற்றும் ரம்யா (41) ஆகியோர் மோசடி செய்தனர். அவர்களை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இந்த நிலையில் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகர குற்றப்பிரிவில் செட் ஈ பேமண்ட் பிரைவட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களிடம் முதலீடு செய்ததற்கு ஆதாரமாக உள்ள ஆவணங்களுடன் கோவை மாநகர குற்றப்பிரிவு 1ல் நேரில் வந்து புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.