சித்திரைச்சாவடி செல்வோர் கவனம்: இளைஞர் பரிதாப பலி!

கோவை: சித்திரைச்சாவடி தடுப்பணையில் குளித்த வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கரைபுரண்டு ஓடிவரும் நொய்யலின் அழகை ரசிக்க பலரும் சிறுவாணி பிரதான சாலையில் உள்ள சித்திரைச்சாவடி அணைக்குச் சென்று வருகின்றனர்.

கோவை குற்றாலம் செல்லும் பொதுமக்கள் பலரும் இந்த தடுப்பணையைப் பார்த்துச் செல்கின்றனர்.

அந்த வகையில், கோவை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்த கார்த்திக் (வயது 28) என்ற இளைஞர் தனது நண்பர்கள் மூவருடன் சித்திரைச்சாவடி தடுப்பணைக்குச் சென்றார்.

அங்கு நண்பர்களுடன் குளித்த போது கார்த்திக் ஆழ்மான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கார்த்திக் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்திரைச்சாவடி அணையில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை தருவது நிறுத்தி வைக்கப்பட்டது…

கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.