பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கியவர் கைது!

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய அன்னூரை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன்(32). இவர் அத்திபாளையம் பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

அப்போது அங்கு அவருக்கு ஏற்கனவே அறிமுகமான சிலர் நின்றிருந்தனர். திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு என்ற வாலிபர் அங்கிருந்த பீர் பாட்டிலால் உன்னி கிருஷ்ணனை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் விசாரித்தனர்.

இதில் முன்விரோதத்தில் உன்னி கிருஷ்ணனை தாக்கியது, அன்னூரை சேர்ந்த விஷ்ணு(27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் அனைத்து ரேஷன் கடைகளில் மோடி புகைப்படம் – 50 பாஜகவினர் கைது

கோவையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Video

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அட்டகாசம்: இன்ப்ளுயன்சர்களிடம் விசாரணை!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஜித்து சாஜி மற்றும் நண்பர்கள் பொது இடத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை போலீசார் விசாரணை செய்தனர்.