கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், முக்கிய இடங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.

Advertisement

மர்ம ஆசாமி ஒருவர் இமெயில் மூலம் இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து விடுத்து வரும் நிலையில், தமிழக சைபர் கிரைம் போலீசார் அந்த ஆசாமியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இதனிடையே, கோவை விமான நிலையத்திற்கு இன்று மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement

இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அது புரளி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group