கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ ரிலீஸ்- கோவை திரையரங்கில் கூடிய ரசிகர்கள், கட்சியினர்!!!

கோவை: கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியானதை தேமுதிக தொண்டர்கள், மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்..

Advertisement

இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சுமார் 34 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அதிநவீன தொழில்நுட்பத்தினால் ஒளி ஒலி ஆகியவை மேம்படுத்தப்பட்டு இன்று மீண்டும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோவையிலும் பல்வேறு திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதை தொடந்து ரசிகர்கள் மற்றும் தேமுதிகவினர் திரையரங்குகளுக்கு சென்று படத்தை மீண்டும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டதை தொடர்ந்து பல்வேறு ரசிகர்கள் மற்றும் தேமுதிகவினர் திரைப்படத்தை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். முன்னதாக திரையரங்கிற்கு சென்ற தேமுதிகவினர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க என்று உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...