Coimbatore accident News: மொபட் மீது லாரி மோதி தூக்கி வீசப்பட்டதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி, கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் ராசிபாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் மணியன் (62). இவரது மனைவி சரஸ்வதி (55).
மணியன் நேற்று தனது மொபட்டில் மனைவி சரஸ்வதியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.
இருவரும் சூலூர் அருகே நொய்யல் பாலம் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது கீழே விழுந்த சரஸ்வதியின் தலை மீது லாரியின் பின்சக்கரம் ஏறியது.
இதில் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் கணவன் மணியன் கண்முன்னே நடந்தது.
மணியன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பல்லடத்தை சேர்ந்த லாரி டிரைவர் அருள்சீலன் (46) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

