சிங்காநல்லூர் கொள்ளை வழக்கில் புதிய திருப்பம் – Followup

கோவை: சிங்காநல்லூர் கொள்ளை சம்பவத்தில் முன்னாள் ஊழியருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் (24). இவரது வீடு மத்திய மண்டல அலுவலகம் அருகே உள்ளது. அதன் அருகிலேயே அவர் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவில் அவர் கடையை பூட்டி விட்டு மகா சிவராத்திரி விழாவுக்கு சென்றார். பின்னர் அதிகாலையில் வீடு திரும்பி வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 48 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும்.

உடனே இது குறித்து ராஜேஷ் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

gold shop theft police investigation Coimbatore

அதில் இரவு 10.45 மணி அளவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த வாலிபர் கொள்ளையை அரங்கேற்றி தப்பிச் சென்றது தெரியவந்தது. தீவிர விசாரணையில் அந்த வாலிபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே கடையில் வேலை கேட்டு வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவர் வேலை கேட்டு வந்ததாகவும், வேலை குறித்து பிறகு தகவல் கூறி அனுப்பியதாக ராஜேஷ் தெரிவித்தார்.

மேலும் கடையில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் ஒருவருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.