பூ மார்க்கெட்டில் வியாபாரியின் செல்பொனை திருடிக் கொண்டு ஓட்டம்பிடித்தவர் சிக்கினார்!

கோவை: ஆர். எஸ். புரம் பூ மார்க்கெட்டில் பூ வாங்குவது போல் நடித்து வியாபாரியின் செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

ஆர். எஸ் .புரம் அருகே, மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான பூக்கடைகள் உள்ளன. 

இங்கு தினமும் காலையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்களை வியாபாரிகளிடமிருந்து வாங்கிச் செல்வது வழக்கம். இதனால் எப்போதும் பூ மார்க்கெட்டில் அதிகளவில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். 

இந்த நிலையில் நேற்று காலை அங்கு உள்ள பூக்கடையில் லங்கா கார்னரை சேர்ந்த விஜயன் (வயது 47) என்பவர் மும்முறமாக பூக்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். 

Advertisement

அப்போது அவரது கடைக்கு ஒருவர் வந்து பூ வேண்டும் என்று கூறி விலை கேட்டுள்ளார். விஜயன் வியாபாரம் செய்து கொண்டே அவரிடம் பூக்களை விலையை கூறிக்கொண்டிருந்தார்.

அப்போது விஜயன் கடை மேசையில் வைத்திருந்த செல்போனை அந்த நபர் திடீரென்று எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

Advertisement

அப்போது விஜயன் மற்றும் அங்கு இருந்த வியாபாரிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். பிறகு அவரை ஆர்.எஸ்.புரம் காவக் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரஷீத் (வயது 41) என்பதும், அவர் போத்தனூர் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து செல்போனை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...