கோவை: கோவையில் 3 வருட பழைய சரக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டும் ‘குடிமகன்’ ஒருவரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
உணவுப் பொருட்களுக்கு மட்டுமல்லாமல், மதுபானங்களுக்கும் அதன் பாட்டிலில் காலாவதி தேதி அச்சிடப்பட்டே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை டாஸ்மாக் பாரில் 3 ஆண்டுகள் பழைய மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் ஒருவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் காலாவதி தேதியை பார்க்காமல் மதுவை குடித்ததாக தெரிகிறது.
இதனிடையே திடீரென அவர் மதுபாட்டிலை பார்த்தபோது, அதில் அந்த மது 19/06/2023 அன்று தயாரிக்கப்பட்டதாக அச்சிடப்பட்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அவரது கேள்விக்கு பதில் சொல்லாமல், பாட்டிலை உடைத்து குடித்துவிட்டதால் அதற்கு பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறியுள்ளனர்.
இப்படி பழைய சரக்கை கொடுத்து எங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று கடையில் நின்று அவர் புலம்பும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.


