கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியை கோவை மக்கள் மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர்.
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இருநாட்டு மக்களும் ஆர்வமுடன் இந்த போட்டியை கண்டு களித்து வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் டி20 இறுதிப் போட்டியை பிரம்மாண்ட திரைகள் அமைத்து மக்கள் கண்டு களித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோவை கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொது இடத்தில் led திரைகள் அமைக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

அதன்படி கோவையில் வ.உ.சி மைதானத்தில் எல்இடி திரையில் கிரிக்கெட் போட்டி திரையிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மகளிர் திட்டத்தின் உணவு திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அவர்களே இந்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இங்கு வரும் பொதுமக்கள் உணவு திருவிழாவில் உணவுகளை ருசித்தபடியே டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியை பிரம்மாண்ட திரையில் மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர்.

