கோவையில் டி20 உலகக்கோப்பையை பிரம்மாண்ட திரையில் கண்டு களித்து வரும் மக்கள்…

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியை கோவை மக்கள் மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர்.

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இருநாட்டு மக்களும் ஆர்வமுடன் இந்த போட்டியை கண்டு களித்து வருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் டி20 இறுதிப் போட்டியை பிரம்மாண்ட திரைகள் அமைத்து மக்கள் கண்டு களித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோவை கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொது இடத்தில் led திரைகள் அமைக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

அதன்படி கோவையில் வ.உ.சி மைதானத்தில் எல்இடி திரையில் கிரிக்கெட் போட்டி திரையிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மகளிர் திட்டத்தின் உணவு திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அவர்களே இந்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இங்கு வரும் பொதுமக்கள் உணவு திருவிழாவில் உணவுகளை ருசித்தபடியே டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியை பிரம்மாண்ட திரையில் மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் அவ்வளவு தான்- கோவையில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் அச்சம்…

கோவை: சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் தள்ளுவண்டி கடையினர் உள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடை நடத்த முடியாமல் போய்விடும் வாழ்வாதாரம் பெரியதளவு பாதிக்கப்படும் என்று சாலையோர தள்ளுவண்டி கடையினர்...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.