மகிழ்ச்சி திட்டத்தை கோவையில் துவக்கி வைத்த டிஜிபி…

கோவை:தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் காவல்துறையினர்களுக்கான மகிழ்ச்சி எனும் திட்டத்தை கோவையில் துவக்கி வைத்தார்…

Advertisement

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல்துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.


கோவை மாநகர் சேலம் மாநகர் திருப்பூர் மாநகர் காவல்துறையினருக்காக இத்திட்டமானது தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காவலர் மனநல கையேடு மற்றும் நல்வாழ்வு அலைபேசி எண் ஆகியவை வெளியிடப்பட்டன.

Advertisement

இந்த நிகழ்வில் மேற்கு மண்டல ஐஜி, கோவை மாநகர காவல் ஆணையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட திருப்பூர் சேலம் மாவட்டத்தை சார்ந்த காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்தத் திட்டம் தொடர்பான மையம் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் துவங்கப்பட உள்ளது.

Recent News

வடகிழக்கு பருவமழை- பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வலியுறுத்தல்…

கோவை: வடகிழக்கு பருவமழை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 146.04 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும்,...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group