கோவை: தீபாவளியையொட்டி கோவையில் ரூ. 33 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கோவை மாவட்டத்தில் வடக்கு. தெற்கு கலால் மாவட்டத் தில் 282 டாஸ்மாக் மது பான கடைகள் செயல்ப டுகிறது.
இந்த கடைகளில் தினமும் சுமார் 5 கோடி ரூபாய் அளவிற்கு மதுபா னம் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது பான விற்பனையை அதிகரிக்க இலக்கு வைத்து டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதன்படி நேற்று முன்தினம் தீபாவளி நாளில், தெற்கு கலால் மாவட்டத்தில் 128 மதுபான கடைகளில் 8.7 கோடி ரூபாய்க்கு மதுபா னம் விற்பனை செய்யப்பட்டது. அதற்கு முந்தைய தினம் 7.4 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்பட்து
வடக்கு கலால் மாவட் டத்தில் 154 மதுபான கடை களின் மூலமாக தீபாவளி நாளில் சுமார் 9.3 கோடி ரூபாய்க்கு மதுவிறனை ஆனது.
மாவட்ட அளவில் சுமார் 33.7 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற் பனை செய்யப்பட்டது.
டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, எப்எல் உரிமம் பெற்ற தனியார் மதுபான விற்பனை கடைகளிலும் மதுபான பாட்டில் விற்பனை அதிகமாக நடந்தது. மாவட்ட அளவில் 120க்கும் மேற்பட்ட தனியார் பார்கள் இருக்கிறது. இதில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மதுபாட்டில் விற்பனை நடக்கிறது. இதிலும் பல கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது.



