போதைப் பொருள் ஒழிப்பு: கோவை போலீஸ் எஸ்.ஐ.,க்கு முதலமைச்சர் விருது!

கோவை: போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட கோவை போலீஸ் உதவி ஆய்வாளருக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபாலன் (33). இவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

மேலும் கோவை மாநகர போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு சிறப்புப் படையிலிருந்து வருகிறார்.

தனபாலன் இதுவரை 55 போதைப் பொருள் வழக்குகளில்169 பேரைக் கைது செய்துள்ளார். அவர்களிடமிருந்து161 கிலோ கஞ்சா மற்றும்77 கிராம் மெத்தபெட்டமையின் எனப்படும் போதைப் பொருள் ஆகியவற்றைக் கைப்பற்றி உள்ளார்.

Advertisement

குற்றவாளிகளிடம் இருந்து 29 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 கார்களையும் பறிமுதல் செய்துள்ளார். இவரின் அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து உள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பில் கோவை மாநகரில் சிறப்பாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து தனபாலனுக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை அவர் இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் பெற உள்ளார்.

தமிழ்நாட்டில் 15 போலீஸ் அதிகாரிகளில் கோவை மாநகரில் விருது பெரும் ஒரே ஒரு எஸ்.ஐ தனபாலன் ஆவார். அவரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

1 COMMENT

Comments are closed.

Recent News

துணை ஜனாதிபதி பாதுகாப்பு விஷயத்தில் போலீசார் கூறுவது ஏற்க தக்கது அல்ல- வானதி சீனிவாசன்…

கோவை: துணை ஜனாதிபதி பாதுகாப்பு வளையத்திற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் விஷயத்தில் போலீஸ் கூறுவது ஏற்கக் கூடியது அல்ல என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற சாலையோர வியாபாரிகள்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group