கோவையில் போதை இளைஞர்கள் அட்டகாசம் – கார்கள் மீது மோதிய வீடியோ வெளியீடு!

கோவை: கோவையில் போதையில் இருவராக வந்த இளைஞர்கள், பைக்கில் தாறுமாறாக ஓடி கார்கள் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பல்வேறு இடங்களில் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் போலீசார் அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞர்கள் மீது கண்காணிப்பு மற்றும் அபராத நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் வடவள்ளியில் இருந்து கோவை மாநகருக்குள் செல்லும் லாலி சாலையில், போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் பைக்கில் தாறுமாறாக ஓடி கார்கள் மீது மோதினர். சேதத்தை ஏற்படுத்திய பின்னரும் தப்பிச் செல்ல முயன்ற அவர்களை சக வாகன ஓட்டிகள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செல்போனில் பதிவு செய்த இந்த காட்சிகளை News Clouds Coimbatore வாசகர் ஹரிஹரன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் இப்படிப்பட்ட போதை ஆசாமிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...