கோவையில் மதுபோதையில் இளம்பெண் ரகளை!

கோவை: கோவையில் அரசு மருத்துவமனை முன் இளம்பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனை முன் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மது போதையில் ரகளை செய்து கொண்டிருந்தார். நடுரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை வழிமறித்தார்.

Advertisement

அதைத் தட்டி கேட்டவர்களை இந்தியில் திட்டி உள்ளார். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர். ஆனால் அந்த பெண்ணால் எந்த பதிலும் கூற முடியாமல் அவர் தள்ளாடினார்.

Advertisement

இதனால் போலீசார் அந்த பெண்ணை சாலை ஓரமாக அமர வைத்துச் சமாதானப்படுத்தி அறிவுரை கூறினர். இதனால் அந்த பெண் அமைதியாக அங்கு அமர்ந்து கொண்டார்.

இதையடுத்து போலீசார் போக்குவரத்தைச் சரி செய்து அங்கிருந்து சென்றனர். காலை நேரத்தில் இளம் பெண் ஒருவர் மது போதையில் தள்ளாடியாததால் அரசு மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Recent News

தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினரின் எச்சரிக்கை

கோவை: தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 30 அம்ச கோரிக்கைகளை...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group