கோவை: ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக, கோவை விமான நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,
எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த கெடு இரண்டு நாட்களில் முடிவடைய உள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எல்லாம் நன்மைக்கே என பதில் அளித்தார்.
ஓ.பி.எஸ், டி.டி.வி கட்சி ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்து வருவது தொடர்பான கேள்விக்கு,
தன்னைப் பொறுத்த வரை இயக்கம் நன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் இணைய வேண்டும் வெற்றி என்ற இலக்கு, அம்மாவுடைய ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் தன்னுடைய முழு ஆசை என தெரிவித்தார்.
மீண்டும் செல்வீர்களா என்ற கேள்விக்கு, தான் தற்போது திருமணத்திற்கு செல்வதாக பதில் அளித்த செங்கோட்டையனிடம் எப்போது அ.தி.மு.க வில் ஒன்றிணைவார்கள் என்ற கேள்விக்கு, அனைவரும்
ஒரு மாதத்தில் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.