Rain Alert Coimbatore: கோவை உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மதியம் ஒரு மணி நிலவரப்படி சென்னை வானிலை மையம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோவை, நீலகிரி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைப் பொறுத்தவரை மலை மற்றும் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Get the Best Raincoats for the Monsoon – Shop Now!







