கோவையில் திறக்கப்பட்டது இணையத் தொழிலாளர்கள் கூடம்…

கோவை: சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையிலும் இணைய தொழிலாளர்கள் கூடம் திறக்கப்பட்டது.

கோவையில் அமைக்கப்பட்டுள்ள இணையத் தொழிலாளர்கள் கூடத்தை எம்பி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Advertisement

சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாநகராட்சி பகுதியில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள இணையத் தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் தனி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக காந்திபுரம் நகர பேருந்து நிலையம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

காந்திபுரம் பகுதியில் 16.82 லட்சம் மதிப்பில் இருக்கை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதியுடன் அமைக்கப்பட்ட இந்த கூடத்தை கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து தொழிலளர்களுடன் கலந்துரையாடினர்.

Advertisement

இது குறித்து பேட்டியளித்த எம்பி கணபதி ராஜ்குமார், இணைய தொழிலாளர்கள வசதிகாக கோவை மாநகராட்சியில் 7 இடங்களில் இந்த கூடங்கள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இன்று காந்திபுரம் பகுதியிலும் நாளை ஆர்.எஸ்.புரம் பகுதியிலும் இந்த திறந்து வைப்பதாக கூறினார்.

ஆட்டோர் ஓட்டுனர்களும் இது போன்ற கூடங்கள் வேண்டுமென்று கேட்டுவருவது குறித்தான கேள்விக்கு வாய்ப்பிருந்தால் நிச்சயம் ஏற்பாடு செய்யலாம் என்றார்.

Recent News

வாக்காளர் பட்டியலில் பல்வேறு இடங்களில் திமுக முறைகேடு செய்துள்ளது- அண்ணாமலை குற்றச்சாட்டு…

கோவை: திமுக பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும் முறைகேடுகளும் செய்துள்ளது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், திமுக...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp